2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கியுள்ளது என்றும் இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்.
அதேபோல், இஸ்ரோவின் 3-வது ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளதாகவும் இரண்டாவது ஏவுதள மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.























