இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க தாக்குதல் – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்
இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க கடற்படையின் (US Navy) நீர்மூழ்கிக் கப்பல் (Submarine) மூலம் செலுத்தப்பட்ட Torpedo குண்டு தாக்குதலில் அந்த போர்க்கப்பல் முழுமையாக அழிந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் **,**
“1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதல் முறையாக ஒரு போர்க்கப்பலை Torpedo நீர்மூழ்கிக் குண்டு மூலம் அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் தரப்பில் இருந்து இதுவரை முழுமையான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு இந்த தாக்குதல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


























