எல்லைப் பாதுகாப்பில் வீரத்துடன் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், 2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை முதலீட்டு விழா நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறையினர் உள்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் இந்த வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அதோடு, பாதுகாப்புப் படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.