2050க்குள் 3.5 மில்லியனை தாண்டும் மார்பகப் புற்றுநோய் – உலகளாவிய எச்சரிக்கை
உலகளவில் பெண்களிடையே அதிகம் கண்டறியப்படும் புற்றுநோயாக உள்ள மார்பகப் புற்றுநோய், 2050ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 3.5 மில்லியன் புதிய நோயாளிகளைத் தாண்டும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இந்த ஆய்வு, உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
(WHO) மற்றும் (IARC) ஆகிய அமைப்புகள் இணைந்து தொகுத்துள்ள கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், உடற்பயிற்சி குறைவு, உடல் பருமன், மது அருந்தும் பழக்கம் போன்ற காரணிகள் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
குறைந்த வருமான நாடுகளில் இருமடங்கு இறப்பு அபாயம்
ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் என்னவெனில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணமாக,
- ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டறியும் பரிசோதனை வசதிகள் இல்லாமை
- தரமான சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான அணுகல் குறைவு
- புற்றுநோய் விழிப்புணர்வு பற்றாக்குறை
- சுகாதார கட்டமைப்பில் சமத்துவமின்மை
ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தடுப்பு மற்றும் முன்கூட்டிய கண்டறிதல் அவசியம்
நிபுணர்கள் தெரிவிப்பதாவது, முன்கூட்டிய பரிசோதனை (Early Screening), சுய மார்பக பரிசோதனை, மாமோகிராம் போன்ற பரிசோதனைகள், மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும்.
WHO, அனைத்து நாடுகளும் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டங்களில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக வளம் குறைந்த நாடுகளில் சமமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.





















