Site icon No #1 Independent Digital News Publisher

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version