திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Caring Hearts Foundation மற்றும் Lion’s Club of Chennai Centennial Anna Nagar (திருவள்ளூர் கிளை) சார்பில், Ln. திலிப் அவர்களின் மகளின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சமூகப்பணியில் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநல பாதுகாப்பில் உள்ள மக்களுக்கு அன்புடன் உணவு வழங்கப்பட்டது. மனநல பாதுகாப்பில் உள்ளவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் அன்பும் மனிதநேயமும் பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு, அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர், சமூகத்தில் புறக்கணிக்கப்படும் மக்களுக்கும் அன்பும் ஆதரவும் அவசியம் என்பதை வலியுறுத்தினர். மேலும், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தும் இத்தகைய சேவைகள் தொடர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
Dr. Gracy S தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக அக்கறை மற்றும் கருணையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக சேவையுடன் இணைத்த இந்த முயற்சி, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

