சூழல் நட்பு அரசியல்: நாம் தமிழர் கட்சியின் முன்னோடி நடவடிக்கை
செய்தி
தேர்தல்கள் உலகளவில் அதிகமான சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜனநாயக நடைமுறைகளாகக் கருதப்படுகின்றன. தேர்தல் கால பிரசாரங்கள், மாநாடுகள், போக்குவரத்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிக்கின்றன. இந்தப் பின்னணியில், மேலை நாடுகளில் மட்டுமே தொடங்கியுள்ள “சூழல் நட்பு தேர்தல்” குறித்த உரையாடல்கள் இந்தியாவில் இன்னும் பரவலாக உருவாகவில்லை.
இத்தகைய சூழலில், எந்த வெளிப்புற அழுத்தங்களும் இல்லாமல் தனது மாநாட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Reusable) தண்ணீர் புட்டிகளை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்க முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதிக செலவு இருந்தாலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைக் தவிர்த்து சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய இந்த முடிவு, அரசியல் செயல்பாடுகளிலும் நிலைத்த வளர்ச்சி சாத்தியமென்பதை உணர்த்துகிறது.
இந்த முயற்சி, இந்திய அரசியலில் சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதுடன், பிற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு நடைமுறை முன்மாதிரியாக அமையக்கூடும்.

























