Site icon No #1 Independent Digital News Publisher

AI வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர் முதலீடு

AI வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர் முதலீடு

டெல்லி AI உச்சி மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான செயற்கை நுண்ணறிவு (AI) துறையை விரிவுபடுத்த 50 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் மதிப்பிலான AI முதலீடுகளை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட், தற்போது தனது கவனத்தை “Global South” நாடுகள் முழுவதும் பெரிதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள் AI உட்கட்டமைப்பு, மேகக் கணினி (Cloud Computing), தரவு மையங்கள், திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் AI புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தப்படவுள்ளன.

மைக்ரோசாஃப்டின் இந்த முடிவு, வளர்ந்து வரும் நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வேகப்படுத்துவதோடு, தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் உலகளாவிய போட்டித் திறனை உயர்த்தும் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு, AI எதிர்காலத்தில் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் முக்கிய மையங்களாக உருவாகும் என்பதற்கான வலுவான சைகையாக கருதப்படுகிறது.

Exit mobile version