Site icon No #1 Independent Digital News Publisher

மார்ச் 16-ல் 37 மாநிலங்களவைக் (ராஜ்யசபா) இடங்களுக்கு தேர்தல் – சரத் பவார் உள்ளிட்ட எம்.பிக்கள் ஓய்வு

மார்ச் 16-ல் 37 மாநிலங்களவைக் (ராஜ்யசபா) இடங்களுக்கு தேர்தல் – சரத் பவார் உள்ளிட்ட எம்.பிக்கள் ஓய்வு

நியூ டெல்லி:
10 மாநிலங்களில் காலியாகும் 37 ராஜ்யசபா இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5 வரை நடைபெறும். மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் மூலம் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். அவர்களில் முக்கியமாக உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். இந்த மாற்றங்கள் தேசிய அரசியலில் புதிய அரசியல் சமநிலைகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் இந்த மறைமுகத் தேர்தல், நாடாளுமன்ற மேலவையின் அரசியல் பலத்தை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Exit mobile version