2026 தேர்தலில் AI வேட்பாளர்?
கொலம்பியா பார்லிமென்ட் தேர்தலில் ‘கைத்தானா’ சர்ச்சை
கொலம்பியா நாட்டின் வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில், ‘கைத்தானா’ (Gaitana) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் அவதாரை வேட்பாளராக களமிறக்கும் முயற்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த AI வேட்பாளர், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட பார்லிமென்ட் இடத்தை குறிவைத்து உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 16ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிய பழங்குடியினத் தலைவி அவர்களின் நினைவாகவே இந்த டிஜிட்டல் அவதாருக்கு ‘கைத்தானா’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், மனிதர் அல்லாத AI ஒரு ஜனநாயக தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்க முடியுமா?
வேட்பாளரின் சட்டபூர்வத் தகுதி, பொறுப்புத்தன்மை, வாக்காளர்களின் பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை கேள்விகள் தற்போது தீவிர விவாதமாக மாறியுள்ளன.
அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, இந்த முயற்சி தொழில்நுட்பத்தின் புதிய எல்லையை சுட்டிக்காட்டினாலும், ஜனநாயகத்தின் மையமான மனித பிரதிநிதித்துவத்தை சவாலுக்கு உட்படுத்துவதாகும். இதனால், கொலம்பிய தேர்தல் ஆணையமும் சட்ட நிபுணர்களும் இந்த முயற்சியை மிக கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

