ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள்: தடைகளைத் தாண்டி அரசியலில் உச்சம் தொட்ட இரும்புப் பெண்
பெண்கள் அரசியலில் வெற்றி பெறுவது கடினம் என்ற நம்பிக்கை இன்னும் நிலவும் சமூகச் சூழலில், எண்ணற்ற தடைகள், சோதனைகள், அவதூறுகள், அவமதிப்புகள் மற்றும் துரோகங்களைத் தாண்டி தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்தவர் .
நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறி, ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அரசியல் களத்தில் தன்னிச்சையான முடிவுகள், கடும் நிர்வாக ஒழுங்கு மற்றும் மக்களிடம் நேரடி அணுகுமுறையின் மூலம் தனிப்பெரும் தலைவியாக உயர்ந்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பலமுறை பதவி வகித்த ஜெயலலிதா, சமூகநலத் திட்டங்கள், பெண்கள் அதிகாரமூட்டல், வறியவர்களுக்கான உணவுத் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் “அம்மா” என்ற பெயரை மக்கள் மனங்களில் ஆழமாக பதித்தார்.
அரசியல் எதிர்ப்புகள், சட்டச் சவால்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் என பல இன்னல்களை எதிர்கொண்டபோதும், தளராத மனவலிமையுடன் மீண்டும் மீண்டும் அரசியல் மேடையில் எழுந்தவர் என்பதே அவரது வரலாற்றுச் சிறப்பு.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலில் பெண்கள் தலைமைக்கு வழிகாட்டிய ஒரு மாபெரும் அரசியல் சின்னமாக நினைவுகூரப்படுகிறார்.


























