‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கல்: ரிவைசிங் கமிட்டி பார்வை திடீர் ஒத்திவைப்பு
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தற்போது சென்சார் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்கத்தில், தவெக தலைவர் மற்றும் நடிகர் நடித்துள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சென்சார் சான்றிதழ் தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு திரைப்படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி முன் மறுபரிசீலனைக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, இன்று பிற்பகல் 2 மணிக்கு ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு திடீரென உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுவதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பார்வை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வழங்கும் செயல்முறை மேலும் சில நாட்கள் தாமதமாகக்கூடும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில், புதிய தேதியில் ரிவைசிங் கமிட்டி பார்வை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தின் அரசியல் பின்னணி மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த சென்சார் சிக்கல் மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

