Site icon No #1 Independent Digital News Publisher

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: அமெரிக்க தளங்கள் குறிவைப்பு – ஈரான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

பஹ்ரைன், யுஏஇ, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வந்த பதற்றம், நேரடி போர் நிலைக்கு நகரும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஈரான்–அமெரிக்க மோதல்

ஈரான் தாக்குதலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
“ஈரானின் ஏவுகணைகள், கடற்படை உள்ளிட்ட அனைத்து ராணுவ திறன்களும் முழுமையாக அழிக்கப்படும்” எனக் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளித்த ஈரான்,
“நீங்கள் தொடங்கி வைத்தீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை” என கடும் வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளது.

இஸ்ரேல்–ஈரான் போர்: ஹெஸ்புல்லா தலையீடு

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இதனால் – இடையேயான மோதல், பிராந்திய அளவில் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

லெபனானின் எச்சரிக்கை

இந்த நிலையில், லெபனான் பிரதமர் ,
“ஈரான்–இஸ்ரேல் போரில் ஹெஸ்புல்லா தலையிடக் கூடாது. இது லெபனானை பெரும் அபாயத்தில் தள்ளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனானுக்குள் போர் பரவாமல் தடுக்க அரசியல் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரான் ராணுவத்தின் நேரடி பதில்

இஸ்ரேல் மீது நேரடி பதில் தாக்குதலை ஈரான் ராணுவம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் சந்தை, உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு சூழ்நிலைகளில் இதன் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கவலை

இந்த மோதலில் உள்ளிட்ட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு, உடனடி போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version