இணையதள ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்.
இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் தொடங்கி மாநிலங்களின் முதல்வர்கள்வரை அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கட்டும் கட்சி சார்ந்த கருத்தாக இருக்கட்டும் அனைத்தையும் மக்களிடத்தில் உடனடியாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகத் தற்போது இணையதள ஊடகம் பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு நாட்டினுடைய வரலாற்றையே மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை இணையதள ஊடகங்களுக்கு இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஒரு நாட்டினுடைய போராட்டம் தொடங்கி கொண்டாட்டம்வரை இணையதள ஊடகங்களில் தினந்தோறும் நடந்து வருகிறது.
மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கூட உள்ளங்கையில் இருக்கும் ஆயுதமாக இணையதள ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தியா மட்டுமல்ல உலக அரங்கில் தொழில்நுட்பம், அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பல துறைகளில் இணையதள ஊடகம் முக்கிய பங்காற்றி வருகிறது. உலகெங்கிலும் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் பாடகர்கள் பல பிரபலங்கள் இணையதளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகின்றனர். தங்களின் ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கின்றனர்.
ஒரு நாட்டினுடைய பொருளாதாரம், ராணுவம், உள்நாட்டு விவகாரம் மற்றும் கலை கலாச்சார பிரிவுவரை அனைத்தையும் வெளிப்படை தன்மையோடு மக்களிடம் நேர்மையாகத் தகுந்த நேரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இணையதள ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அரங்கில் அரசியல் களத்தில் இணையதள ஊடகங்கள் கட்சிப் பிரச்சாரம் தொடங்கி வாக்கு சேகரிப்பு, கருத்துக் கணிப்பு, மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்வது, உடனுக்குடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது போன்ற பல தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணையதள ஊடகங்களைப் பொறுத்தவரையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய வரிசையில் முதலாவது இடத்தில் இருப்பது
whatsapp இரண்டாவது இடத்தில் இருப்பது twitter மூன்றாவது இடத்தில் இருப்பது facebook நான்காவது இடத்தில் இருப்பது youtube ஐந்தாவது இடத்தில் இருப்பது instagram.






















