Site icon No #1 Independent Digital News Publisher

திமுக அரசு வேலை வாய்ப்பில் தோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்!

சென்னை:“தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 50,000 பேர் அரசு வேலைவிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் அந்த இடங்களை நிரப்ப திமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

மே மாத இறுதியில் மட்டும் 8,144 பேர் ஓய்வு பெறுகிறார்கள்.ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்கு 50,000 பேர் அரசு பணியிலிருந்து விலகுகிறார்கள்.இந்த காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.திமுகவின் ஆட்சியில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது: திமுக ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது.ஆனால், இவ்வளவுக்கு நேரத்தில் நிரந்தர அரசு வேலை கிடைத்தவர்கள் வெறும் 40,000 பேர் மட்டுமே.இவர்களிலும் 30,000 பேர் தற்காலிகம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.

 

திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன சொல்கிறது?

2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக கூறியது:”மூன்றரை லட்சம் காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றை நிரப்புவோம்.மேலும் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம், ஆனால் இன்று, காலியிடங்கள் 6.5 லட்சத்தை எட்டியுள்ளது.

 

அன்புமணியின் கடும் விமர்சனம்:

திமுகஅரசு இளைஞர்களுக்கு துரோகம் செய்துள்ளது.அவர்களை நம்பி வாக்களித்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வேலை வாய்ப்பு கொடுப்பதில் திமுக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.மக்கள் எதிர்காலத்தில் இதற்கான பதிலை தேர்தலில் தெரிவிப்பார்கள்” என்றார்.

 

Exit mobile version