புதிய நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்: அமைச்சர் என். ஆனந்த் உறுதி
தமிழக அரசியலில் மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், கட்சியின் தற்போதைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பதவி குறித்த அச்சம் ஏற்படலாம் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “புதிதாக மாற்றுக் கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நமது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதனால், ‘நமக்கு பதவி இருக்குமா, இல்லையா’ என்ற அச்சம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், யாரையும் கைவிடக் கூடாது என்பதுதான் நமது முதலமைச்சரின் மனப்பான்மை,” என்று கூறினார்.
மேலும், “அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, தவெகவில் பணியாற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தகுந்த மரியாதையும் பொறுப்பும் வழங்கப்படும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் என். ஆனந்த், “விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
அதேவேளை, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தெரியப்படுத்தினால், அவற்றை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.

