Site icon No #1 Independent Digital News Publisher

அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

அஜித் பாதுகாப்பாக உள்ளார் – துபாய் பதற்றம் குறைந்ததும் சென்னை திரும்புவார்

துபாய் | சிறப்பு செய்தி

நடிகர் அஜித் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
துபாயில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், அவர் சென்னை திரும்புவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, விமான சேவைகள் மற்றும் பயண ஏற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில், நடிகர் அஜித் குமார் துபாயில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

“அஜித் குமார் முழுமையாக பாதுகாப்பாக உள்ளார். பதட்டமான சூழ்நிலை சீரானதும், உடனடியாக சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
அஜித் குமார் தற்போது எந்தவிதமான உடல்நல பிரச்சினைகளும் இல்லாமல் நலமாக இருப்பதாகவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version